Sunday, December 13, 2015

நம்ம வாழ்க்கை நல்லா போகுதா..? நாசமா போகுதா..? எல்லாரும் கண்டிப்பா பாக்கனும்

சுமார் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னால.. தூங்கி எழுந்ததும்.. பல் துலக்கிட்டு டீ குடிக்கலாமா..? இல்ல அப்பிடியே டீ குடிக்கலாமா..? என்பது தான் நம்மளோட முதல் சிந்தனையாக இருக்கும். ஆனால் இப்போதோ.. ஒரு செல்பீ எடுத்து.. "வோக்டு அப்" (Woked Up) என்று டைப் செய்து யாருக்காச்சும் அனுப்பிவிட்டுட்டு.. உடனே.. ஃபேஸ்புக்ல இன்னைக்கு என்ன கருத்து சொல்லலாம்..? இன்ஸ்டாகிராம்ல இன்னைக்கு என்ன போட்டோ போடலாம்..? என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம்..!

கொஞ்சம் நேரம் அமைதியாக ஊட்காந்து யோசித்தால், இதெல்லாம் நாம் ஏன் செய்கிறோம்..? எதற்காக செய்கிறோம்..? என்று நமக்கே புரியாது. அதே சமயம் இதெல்லாம் செய்யாமல் நம்மால் இருக்கவும் முடியாது.

அந்த மாதிரியான நேரத்தில் தான் நமக்கு ஒரு கேள்வி எழும் - நம்ம வாழ்க்கை நல்லா போகுதா..? நாசமா போகுதா..?!நம்ம வாழ்க்கை நிஜமாகவே எப்படி போகுதுனு.. கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ள 16 ஓவியங்கள் உணர்த்தும்..!

11-1449844000-1.jpg

01. வேற்று கிரகவாசி :

மொபைல் இல்லாதவர்கள் வேற்று கிரகவாசி போல் உணர்வார்கள்..! 

11-1449844002-2.jpg


02. போஸ்ட் :

அனுபவிப்பதோ கால் கிலோ.. ஆனால், போஸ்ட் செய்வதோ 200 கிலோ..! 

11-1449844004-3.jpg

03. வளர்ச்சி :

நிஜமாகவே.. பெரிய வளர்ச்சி தான் ?!

11-1449844007-4.jpg

04. போட்டோ :

பிடிச்சவங்கள போட்டோ எடுக்குறத மறந்து ரொம்ப நாள் ஆச்சி..! இல்ல..?? 

11-1449844009-5.jpg

05. அடிமை :

மறுபடியும் நாம் அனைவரும் அடிமையாகி விட்டோம்..! அப்படி தானே !? 

11-1449844011-6.jpg

06. ரசிப்புத்தன்மை :

வீடியோ ரெக்கார்ட்டிங் பழக்கம் நம்மையும் நம் ரசிப்புத்தன்மையையும் தொலைத்து விட்டது. 

11-1449844013-7.jpg

07. உரையாடல் ;

சாப்பிடும் போது நிகழ்த்தப்படும் உரையாடல்களை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை..! 

11-1449844016-8.jpg

08. புதுவகை :

புதுவகையான வெயிலால் ஏற்படும் மேல் நிறம் (Tan)..!

11-1449844017-9.jpg

09. தனி்மை :

நாம் தனியாக இருப்பதாய் உணர முடியவில்லை..!

11-1449844020-10.jpg

10. பிராத்தனை :

உணவருந்தும் முன்பு பிராத்தனையெல்லாம் செய்ய வேண்டாம், கிளிக் செய்தால் போதும்..! 

11-1449844022-11.jpg

11. அறிவு :

தொழில்நுட்ப கருவிகளின் வடிவமும் நம் அறிவும் சிரிதாகி கொண்டே போகிறது..! 

11-1449844025-12.jpg

12. ஆப்பிள் :

எல்லோருக்குமே ஆப்பிள் தேவைப்படுகிறது..! 

11-1449844027-13.jpg

13. கேமிரா :

புதிதாய் பிறந்த குழந்தை சந்திக்கும் கேமிராக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

11-1449844030-14.jpg

14. ஓடிப்போய்விட்டது :

காதல்...? காணமால் போய் விட்டது என்று சொல்வதை விட ஓடிப்போய்விட்டது என்று சொல்லலாம். 

11-1449844031-15.jpg

15. போஸ்ட் :

சாப்பிடுவதை விட, "சாப்பிடும்கிறோம்..!" என்ற போஸ்ட் தான் முக்கியம்.!? 

11-1449844033-16.jpg

16. சிலை :

அடுத்த தலைமுறை சிலைகளின் கைகளில், மொபைல் போன் இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.!! 

ஸ்மார்ட்போன்களுக்கு மூடுவிழா, இனிமேல் செயற்கை நுண்ணறிவு தான்.!!

ஸ்மார்ட்போன்களுக்கு மூடுவிழா, இனிமேல் செயற்கை நுண்ணறிவு தான்.!!


இன்றைய ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரும் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தொலைதொடர்பு நிபுநர்கள் தெரிவிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது கருவிகளுடனான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வழி செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

worldmap_520.gif

நாற்பது நாடுகளை சேர்ந்த சுமார் 1,00,000 பேர் கலந்து கொண்ட நேரமுக தேர்வின் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் ஸ்மார்ட்போன்களின் தேவை முடிந்து விட்டது என்பதை உணர்த்தும் வகையில் பதில் அளித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கும் பல தவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.. 

10-1449751351-01.jpg

வாழ்க்கை முறை

உலகளவில் மூன்றில் ஒருவர் ஆன்லைன் சார்ந்த போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வதாக அறியப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் நான்கு பேர் ஆன்லைன் மூலம் அதிகம் சேமித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

5145.jpg?w=620&q=85&auto=format&sharp=10

ஸ்ட்ரீமிங்

இளைஞர்கள் அதிகளவில் யூட்யூப் வீடியோ பார்க்கின்றனர். குறிப்பாக 16 முதல் 19 வயதுடைய சுமார் 46 சதவீதம் பேர் குறைந்தது ஒரு மணி நேரமாவது யூட்யூப் பயன்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது. 

VirtualEducation.jpg

விர்ச்சுவல்

தினசரி பயன்பாடுகளுக்கு விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். வீடியோ அழைப்பு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதோடு சுமார் 44 சதவீதம் பேர் தங்களது சொந்த உணவினை அச்சிடவே விரும்புகின்றனர். 

770x316xthumbnail.jpg.pagespeed.ic.wi_Sa

ஸ்மார்ட் ஹோம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் செங்கல்களில் மின் கசிவு, கசிவு போன்றவைகளை கண்டறிய சென்சார்கள் பொருத்தப்படலாம் என 55 சதவீத ஸ்மார்ட்போன் பயனாளிகள் நம்புகின்றனர். இதை செயல்படுத்தும் துவக்கமாகவே ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் அமைந்திருக்கின்றது எனலாம்.

10-1449751365-05.jpg

பயணிகள்

எதிர்காலத்தில் சிறிதளவு நேரத்தையும் வீணடிக்க விரும்பாதவர்கள் தனிப்பட்ட கணினி சேவைகள் கிடைத்தால் பயன்படுத்துவோம் என 86 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 

10-1449751362-04.jpg

தொடர்பு

சமூக வலைதளங்கள் ஆபத்து காலங்களில் தகவல்களை பரிமாறி கொள்ள அதிகம் பயன்படுத்தபடும் என கண்டறியப்பட்டுள்ளது. பத்தில் ஆறு பேர் ஆபத்து காலங்களில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

garment.png

சென்சார்

உடல் நலன் சார்ந்த தகவல்களை துல்லியமாக வழங்கும் தொழில்நுட்பம் அடுத்த வகை அணியும் கருவிகளாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகை தொழில்நுட்பங்களை பயன்படுத்த பத்தில் எட்டு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Smartphone-Hacking-1.jpg

ஹேக்கிங்

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளிகள் எதிர்காலத்திலும் ஹேக்கிங் மற்றும் வைரஸ் அச்சுறுத்தல்கள் இருக்கும் என்றே தெரிவித்துள்ளனர். 

online-training.jpg

ஆன்லைன் ஆதிக்கம்

வாடிக்கையாளர்கள் அதிகளவிலான தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்வதால் சமூகத்தில் இதன் பாதிப்பு அதிகமாகவே இருப்பதோடு இதன் தாக்கம் அதி பயங்கரமாக இருக்கும் என்றே ஐந்தில் மூவர் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் சூடாகாமல் பார்த்து கொள்வது எப்படி.??


phpqqiinn.jpg

புது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாகின்றது என்ற பிரச்சனை பெரும்பாலான கருவிகளில் காணப்படுகின்றது. தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பிரபல போன்களான லெனோவோ கே3 நோட், யுரேகா, யுபோரியா, மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க், சியோமி எம்ஐ 4ஐ போன்ற போன்களுக்கு கூட இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. உயர் ரக ஸ்மார்ட்போன்களான ஒன் ப்ளஸ் 2 மற்றும் சோனி எக்ஸ்பீரியா இசட் போன்ற போன்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு. இதை எப்படி தீர்ப்பது என்பதை இங்கு பார்ப்போம்.

overheat.png

போனில் விளையாடுவது மற்றும் அதிகமாக ஆப்ஸ் பயன்படுத்துவது போன்ற செயல்களால் போன் அதிகளவில் சூடாகின்றது. இதை தவிர்க்க என்ன செய்யலாம். 

12-1449894298-01.jpg


தேவையில்லாத தொடர்புகளை செயல் இழக்க செய்தல் அவசியம்

முதலில், இருக்கும் இடத்தை குறிக்கும் அப்ளிகேஷனை செயல் இழக்கம் (disable) செய்தல் வேண்டும். இந்த மேப் அதிக அளவு பேட்டரியை இழுக்கும். தற்பொழுது நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் போன் கண்டுபிடித்து கொண்டேயிருப்பதால் தேவையில்லாமல் அதிக அளவில் போன் சூடாகின்றது. இது மட்டுமில்லாமல் மற்ற ஆப்ஸ்களான ஃபேஸ்புக், கூகுள், ப்ளூடூத், வை-பை போன்றவகைகளையும் செயல் இழக்கம் செய்யாமல் (disable) அப்படியே விட்டால் போனுக்கு அதிக அளவு சூடாகின்றது. 

3G-and-4G-techs.jpg

மொபைல் தரவுகளை அதிக நேரம் பயன்படுத்துவது

3G மற்றும் 4G போன்ற தரவுகளை அதிக நேரத்திற்கு பயன்படுத்தினால் போனுக்கு வெப்பம் உண்டாகும். ஸ்மார்ட்போனை தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவதற்கு பயன்படுத்தினால் போன் வெப்பம் அடைகின்றது. GPU தொடர்ந்து ஓடி கொண்டிருந்தாலும் போனுக்கு கெடுதல்தான். விளையாட்டுக்கு 20 நிமிடத்துக்கு ஒரு முறை பிரேக் எடுத்தல் அவசியம். 

mobile-apps.jpg

பல பின்னணி பயன்பாடுகள்

உங்கள் மொபைலில் பல பின்னனி பயன்பாடுகள் (Background application) பயன்படுத்தினாலும் போன் சூடாகக் கூடும். இதை தவிர்க்க கிலின் மாஸ்டர் போன்ற தேவையில்லாத பின்னனி ஆப்ஸை கொல்லும் ஆப்ஸை பயன்படுத்துவது அவசியம். 

12-1449894305-04.jpg

அப்டேட்ஸ்

உங்கள் ஸ்மார்ட்போனின் ஓஎஸ் மற்றும் மற்ற ஆப்ஸ்களை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளவும். இப்படி செய்யவில்லை என்றால் மொபைலுக்கு சூடு அதிக அளவில் ஏற்பட்டு விரைவில் பாதிப்பு வந்து விடும்.

12-1449894308-05.jpg

பழைய பேட்டரியை பயன்படுத்துவது

பழைய மற்றும் தரத்தில் குறைவான பேட்டரியை பயன்படுத்துவதால் போன் சூடாகக் கூடும். ஆகவே எப்பொழுதும் தரமான பேட்டரியை குறிப்பிட்ட டீலர்களிடம் இருந்து வாங்கி போனுக்கு பயன்படுத்துங்கள். 

12-1449894309-06.jpg

வை-பை மற்றும் மற்ற சேவைகளை பயன்படுத்துவது

பலர் மொபைல் போனில் பல வேலைகளை செய்ய பயன்படுத்துகின்றனர். 3ஜி, 4ஜி போன்ற தரவுகளை அதிக அளவில் போனில் பயன்படுத்துவதால் போனுக்கு அதிகம் சூடாகின்றது. இதனால் பேட்டரியும் சீக்கிரம் காலியாகி விடும். ஆகையால் அதிக லோடு போனுக்கு வேண்டாமே.

mobile_app_img.png

அதிகமாக ஆப்ஸ் நிறுவுவது

போனில் அதிக அளவில் பின்னனி ஆப்ஸ்களை நிறுவினாலும் போனுக்கு கெடுதல் தான். ஃபேஸ்புக் மற்றும் மெசேன்ஜர் போன்ற ஆப்ஸ்களை அதிக அளவு பயன்படுத்தினால் போன் சூடாகும். நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸ்களை அவ்வபோது நீக்கி விடுங்கள்.

Mediabrix_53123.jpg

அதிக நேரத்திற்கு கேம்ஸ்

அதிக நேரம் போனில் கேம்ஸ் விளையாடுவதை குறைத்து கொள்ளுங்கள். நல்ல தரமான உயர் ரக ஸ்மார்ட்போன்கள் கூட இதனால் பாதிப்பு அடையும் வாய்ப்பு உள்ளது. 20 முதல் 25 நிமிடத்திற்கு ஒருமுறை பிரேக் எடுத்தல் அவசியம். இதனால் போனுக்கு அதிக அளவில் சூடாவதை குறைக்க முடியும்.

12-1449894317-09.jpg

செயல் மேம்படுத்துதல் (Processor Optimization)

உங்கள் மொபைலை பல விதங்களில் மேம்படுத்தியும் சூடாகின்றதா. பின்பு நீங்கள் செய்ய வேண்டியது ரோம் (ROM) ஆப்ஸை நிறுவ வேண்டும். இது உங்கள் போனை சூடாவதிலிருந்து காக்கும். 

12-1449894319-10.jpg

சார்ஜ் செய்யும்போது ஸ்மார்ட்போன் வேண்டாமே

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இருந்தும் செய்வோம். ஆம் சார்ஜ் செய்யும் போது போனை பயன்படுத்துவது. தரவுகளையும், கேம்ஸையும் போன் சார்ஜ் ஆகும் போது பயன்படுத்தினால் போன் விரைவில் கெட்டு போகக் கூடும். ஆகையால் அந்த செயலை நிறுத்தி போனை காத்து கொள்வோம். 

Wednesday, December 9, 2015

ஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள்

ஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள்

நீங்களும் உங்கள் மொபைல் என்னை மனதில் நிலை நிறுத்த சிரமப்படுகுறீர்களா? அப்படியானால் நீங்களும் டிஜிட்டல் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஸ்மார்ட் போன்கள் எங்கள் கையில் எப்போதும் இருப்பதால் மொபைல் எண்ணையும், வீட்டு முகவரியையும் கூட ஞாபக வைத்து கொள்வதில்லை என்று கூறும் இந்த நிலைமையையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். இதனை பற்றி கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சி செய்துள்ளது.

கேஸ்பர்ஸ்கை ஆராய்ச்சி கூடம் பதினாறு வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள 1000 நபர்களைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி 91% மக்கள் தங்கள் மூளைக்கு பதிலாக ஸ்மார்ட் போனையே நம்பியிருந்தது தெரிய வந்தது. மனிதர்கள் கட்டாயமாக அறிய வேண்டிய 50 சதவிகித தகவல்களை ஸ்மார்ட் போன்களே தெரிந்து வைத்திருக்கிறது.
 
மன அழுத்தம் மற்றும் நினைவக இழப்பு-290x213 இந்த செய்தியால் நாம் சிறு சிறு நினைவூட்டலுக்கு கூட ஸ்மார்ட் போன்களை நம்பியிருப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வைத் தந்தது ஒரு நற்செய்தியே என்று சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாக்கட் கூறினார்.
சில சில விசயங்களுக்கு கூட ஸ்மார்ட் போன்கள் நம்மிடையே நிறைந்திருப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் குறுகிய கால நினைவுகளில் செயலிழக்கின்றன .இதனால் நீங்கள் ஒரு வேலை உங்கள் ஸ்மார்ட் போனை இழந்தால் அது உங்கள் மூளையின் ஒரு பகுதியை இழந்ததற்கு சமமாகும். இதனால் நம் நண்பரின் மொபைல் என்னை மட்டுமல்லாது பல நினைவூட்டக்கூடிய தருனங்களையும், புகைப்படங்களையும் நாட்களையும் தான் இழக்க வேண்டியிருக்கும்.
 
இதில் முக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் எதையாவது நம் மொபைல் சாதனத்தில் குறித்து வைக்கும்போது தானாகவே நம் மூளை அந்த விஷயத்தை மனதில் பதிய வைக்க மறுக்கிறது. கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சியின் படி 16 முதல் 24 வயதிற்குள் இருக்கும் நபர்களில் 25% மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் அவர்களின் முக்கிய தகவல்கள் மற்றும் மொபைல் எண்களையும் புகைபடங்களையும் பேக் அப் செய்யாமல் இருந்தனர்.
 
இந்த பிரச்னைக்கு எந்தெந்த விசயங்களுக்கு மக்கள் மூளையை உபயோகபடுத்தாமல் தங்கள் ஸ்மார்ட் போன் சாதனங்களை உபயோகபடுத்துகிறார்களோ அந்த அனைத்து தகவல்களையும் ஒரு மென்பொருளின் உதவி கொண்டு சேமித்து வைப்பதன் மூலம் தீர்வுகள் காணலாம் என சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாகட் தீர்வு கூறியுள்ளார். கூடுதலாக இந்தமாதியான மென்பொருள்களும் கை கொடுக்கவில்லை என்றால் உங்கள் அனைத்து தேவைப்படும் தகவல்களையும் ஒரு சிறு மெமரி கார்டில் சேமித்து வைப்பது சிறந்ததே! மேலும் கூடுமானவரை சில முக்கிய தகவல்களுக்கு போனில் மட்டுமல்லாமல் மனதிலும் நிலை நிறுத்தி வைப்பது ஆபத்து காலங்களில் நமக்கு கைகொடுக்கும். ஏனெனில் மனித மூளை மட்டுமே எப்போதும் யாராலும் திருட முடியாத ஒன்று.