நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?–

1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?– பாடல் வரி

 

மவுன ராகம் எப்படிடா கேக்கும்

 

2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு– பாடல் வரி

 

அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா

 

3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?– பாடல் வரி

 

உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா?

 

4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்– பாடல் வரி

 

முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!!

 

5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?– பாடல் வரி

 

அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க …உனக்க இங்க பாட்டு

கேட்க்குதா..ஓடி போயிடு…

 

6.நலம் நலமறிய ஆவல்!–பாடல் வரி

 

இப்படிக்கு முனுசாமி

 

7.அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நாதாண்டா–பாடல் வரி

 

சார்,கொஞ்சம் மரியாதையா பேசுங்க!!!

 

8.மழை வருது மழை வருது குடை கொண்டு வா—பாடல் வரி

 

யோவ் யாருய்யா ..அது வானிலை அறிவிப்பாளர ஹீரோவா போட்டது??

 

9.காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்—பாடல் வரி

 

அறிவே கிடையாதா? தலை கீழா உட்கார்ந்தா எழுதுவே?

 

10.இரவா பகலா நிலவா—பாடல் வரி

 

கண்ணாடிய போடுங்க முதல்ல!!

 

11.ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ—பாடல் வரி

 

நம்ம வானிலை அறிக்கையை நம்புனாலே இப்படித்தான்!!!

 

 

12.அவள் பறந்து போனாலே—பாடல் வரி

 

அதுக்கென்ன பண்றது வந்தவன் அமெரிக்கா மாப்பிள்ளை ஆச்சே!!