பொன்மொழிகள்-நன்மொழிகள்
- பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்; ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.
பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.
வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.
மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.
அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.
பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.
பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.
''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.
துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;
நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.
முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.
தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.
ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.
என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;
எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.